ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கட்டார் தொண்டு நிறுவனத்தினால் 120 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பு !

இலங்கையிலுள்ள கட்டார் தொண்டு நிறுவனமொன்று 120 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான ஓப்பந்தம் கட்டார் தொண்டு நிறுவனத்துக்கும் சுகாதார அமைச்சுக்குமிடையே கைச்சாத்திடப்பட்டது.

குறிப்பாக Cardiovascular and Respiratory Diseases. நோய்களுக்காகவே இம்மருந்து பொருட்கள் கையளிக்க்படவுள்ளன.

நிகழ்வில் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன, அமைச்சின் செயலாளர் மஹிபால ஹேரத், பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்த்தன, மற்றும் என்.ஜி.ஓ சஞ்சிவ விமல குணவர்த்தனவும் கலந்து கொண்டனர். நிகழ்வு சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்டார் நாட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் மொஹூமூத் அபு கலிபா, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்

இலங்கையில் மேற்படி நோய்களிலிருந்து குணமடைவதற்காக கட்டார் சுகாதார திட்டம் மருந்துப் பொருட்களை வழங்குகின்றது. இந்த திட்டத்தினால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக உதவுகின்றோம். குறிப்பாக இலங்கையில் 47,000 பேர் இந் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எமது இச் சுகாதார திட்டத்தினால் நன்மையடைவரென எதிர்பாக்கின்றோம் என்றார்.

அமைச்சர் டொக்டர் ரமேஸ் பத்திரன உரையாற்றுகையில்,

கட்டார் நாட்டுக்கும் மக்களுக்கும் கட்டார் துாதரகம் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் சத்திரக் சிகிச்சை கூட படுக்கைகள் வெளிநோயாளர் படுக்கைகள் போன்ற தேவைகளையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.

, கட்டார் தொண்டு நிறுவனத்தினால் 120 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இலங்கைக்கு அன்பளிப்பு !

Back to top button