மதுபான கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது !

சட்டவிரோத மதுபான கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை சோதனையிடப்பட்ட போது 270 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஸ்வெட்டகெட்டியாவ பகுதியில் வசிக்கும் நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஜா – எல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியொன்றில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 742 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
, மதுபான கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது !