ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது !

ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த நபரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இன்று (18) கைது செய்துள்ளனர்.
பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் கொழும்பு 02 பகுதியில் ஒரு நிறுவனம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் சம்மாந்தூறை பகுதியை சேர்ந்த ஜின்னா என்றும், இவர் இங்கிலாந்தில் ஆசிரியர் உதவியாளர் மற்றும் உணவகத்தில் வேலைகளை வழங்குவதாக பெண் ஒருவரிடமும் ஆணிடமும் தலா 40 இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் வாக்குறுதியளித்தபடி வேலை கிடைக்காத காரணத்தினால் பணியகத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணை அதிகாரிகள் சந்தேக நபரை தெஹிவளை பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
மேலும் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சரியான உரிமம் ஏஜென்சிக்கு உள்ளதா மற்றும் அதற்கான வேலை உத்தரவை நிறுவனம் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியவும்.
இது ஒரு சரியான வேலைவாய்ப்பு நிறுவனமாக இருந்தாலும், பணியகம் வேலை தேடுபவர்களை தளத்திற்குச் சென்று அல்லது 1989 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
, ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது !