ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

புங்குடுதீவில்,பசுக்களை சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் செயல்பாடுகள் அதிகரிப்பு !

யாழ்ப்பாணம் புங்குடுதீவில், திருடர்களால், பசுக்கள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில், திருடர்களால், பசுக்கள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாகவும், இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு ஜே-22 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வரதீவு பகுதியில், அப்பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர் சிறீதரன் தலைமையிலான குழுவினர்,பற்றைக்காட்டை சுற்றிவளைத்த போது, சட்டவிரோதமான முறையில், பசு ஒன்றை இறைச்சியாக்கிக் கொண்டிருந்த இருவர் தப்பியோடியுள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியில், ஏற்கனவே பல கால்நடைகள், சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக, புங்குடுதீவில், கால்நடைகளை சட்டவிரோத இறைச்சியாக்கும் செயற்பாடுகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில், மீண்டும் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதாகவும், இது தொடர்பில் பொலிசார் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

, புங்குடுதீவில்,பசுக்களை சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் செயல்பாடுகள் அதிகரிப்பு !

Back to top button