ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அதிகரிப்பு !

பட்டம் வழங்கும் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்போது ஆண்டுதோறும் 5 வீதம் ஒதுக்கப்படுகிறது.
மேலும், பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25(4) பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட 26 பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம், இலங்கையை ஆசியாவின் அறிவு மையமாக மாற்றும் நோக்கத்தை அடைய முடியும் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
, பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அதிகரிப்பு !