ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பேருந்தில் வைத்து இளம் பெண்ணின் கூந்தலை வெட்டியவர் கைது

பயணிகள் பேருந்தில் இளம் பெண்ணொருவரின் கூந்தலின் ஒரு பகுதியை வெட்டிய மௌலவி என கூறப்படும் நபரை கண்டி பொலிஸார் நேற்று (13)  கைது செய்துள்ளனர்.

கண்டி – வத்தேகம வீதியில் பயணித்த பேருந்தில் தமது பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த சந்தேகநபர், தனது கூந்தலின் ஒரு பகுதியை கத்திரிக்கோலால் வெட்டியதாக 26 வயதுடைய மடவளையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கண்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

கட்டுகஸ்தோட்டை – வட்டாரதென்ன சந்திக்கு அருகில் சந்தேகநபரால் கூந்தல் வெட்டப்பட்டதைக் கண்ட அந்த இளம் பெண் அலறி அடித்துக்கொண்டு பேருந்தில் பயணித்த ஏனைய பயணிகளின் உதவியை நாடியுள்ளார்.

அப்போது, ​​பேருந்தின் நடத்துனர் மற்றும் பயணிகள் பலர் வந்து சந்தேககநபரை மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபரை அதே பேருந்தில் அழைத்து சென்று கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

, பேருந்தில் வைத்து இளம் பெண்ணின் கூந்தலை வெட்டியவர் கைது

Back to top button