வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நோயாளி விபத்தில் பலி !
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் சனிக்கிழமை (29) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் வைத்தியசாலையிலிருந்து விடுகை பெறாது இரவு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதோடு வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் கண்டனர்..
வீதியில் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் வவுனியா பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
, வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நோயாளி விபத்தில் பலி !