ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை பலி !

உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வெளிநாட்டு பிரஜை நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகளின் தலையீட்டினால் கடலில் இருந்து மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

61 வயதான மலேசிய நாட்டை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

, நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை பலி !

Back to top button