ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் : நாமல் !

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (15) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வடக்குக்கு சென்று 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி வழங்குகிறார்கள்.

முழு நாட்டுக்கும் இடையூறாக இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை இல்லாதொழித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்தார்.

அரசியலமைப்பின் பிரகாரம், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழர்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் எமது ஆட்சியில் தான் அபிவிருத்தியடைந்தது.

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள்.

ஆனால் காலவரையறையின்றி, பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் பற்றி எவரும் பேசுவதில்லை. மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் தமிழர்களின் அரசியல் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் அரசியல் தலைமைகள் அறியவில்லையா?

மாகாண சபைத் தேர்தலை நடத்தவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கட்சி என்ற ரீதியில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் : நாமல் !

Back to top button