ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்கள் நன்கொடை !

பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை இலங்கை (Corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக்கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
, இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்கள் நன்கொடை !