பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் வருடாந்த வைகாசி திருச்சடங்கின் இறுதி நாள்
ரவிப்பிரியா
பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் வருடாந்த வைகாசி
திருச்சடங்கின் இறுதி
நாளான
27.05.2023 அன்று
மாலையில் இருந்து அதிகாலை வரை
பக்திப் பரவசமான நிகழ்வுகள் நடைபெற்றன. பெருந்திரளான மக்கள்
அம்மனை
வழிபடுவதற்காக பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து வருகை
தந்திருந்தனர். பக்தர்கள் தத்தமது நேர்த்திக் கடன்களை தீர்க்கும் முகமாக
தூக்குக் காவடி,
பறவைக்
காவடி,
பாற்காவடி என
காவடிகளைத் தாங்கிய வண்ணம்
நேர்த்திக் கடன்களையும், கற்பூரச் சட்டி,
மடிப்பிச்சை எடுத்து தமது
வழிபாடுகளையும் மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அம்மன்
அருள்
வழங்கும் முகமாக
வீதியுலா வருகையும் அதனோடு
இணைந்து பக்திப் பாமாலைகளும் இடம்பெற்று அதிகாலை விஷேட
பூசை
வழிபாட்டுடன் இவ்வாண்டுக்கான திருச்சடங்கு நிறைவுபெற்றிருந்தது.
, பெரியகல்லாறு அருள்மிகு கடல்நாச்சியம்மன் வருடாந்த வைகாசி திருச்சடங்கின் இறுதி நாள்