ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பியோட்டம் !

வெடிகும்புர பகுதியில் வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தப்பியோடியவர் வெல்லவாய பகுதியைச் சேர்ந்தவர் என மொனராகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
பதுளை, எம்பிலிப்பிட்டிய, வெல்லவாய மற்றும் சியம்பலாண்டுவ நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டு மொனராகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார் .
, வெசாக் வலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறைக் கைதி தப்பியோட்டம் !