4720 தன்சல்கள் பதிவு செய்யப்படவில்லை !

வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட தன்சல்களில் 4720 தன்சல்கள் உள்ளூர் சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் 7980 தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஆனால் உள்ளூர் சுகாதார மற்றும் மருத்துவ அலுவலகங்களில் மூவாயிரத்து இருநூற்று அறுபது தன்சல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் 1744 பானம் வழங்கும் தன்சல்கள் மற்றும் 1516 உணவு தன்சல்கள் ஆகும் .
892 தன்சல்களில் குறைபாடுகள் காணப்பட்டதாகவும், அவற்றை நிவர்த்தி செய்யுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது
அதேவேளை தன்சல்களின் சுகாதார குறைபாடு தொடர்பில் இதுவரை பொதுமக்கள் புகார் எதுவும் வரவில்லை என
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
, 4720 தன்சல்கள் பதிவு செய்யப்படவில்லை !