ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மண்வெட்டியால் தாக்கி நபர் ஒருவர் கொ லை !

தெமோதர நெதர்வில் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (20) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதுடன் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாட்டில் வாக்குவாதம் முற்றி மண்வெட்டியால் இவர் தாக்கி கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி பக்கத்து வீட்டில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

, மண்வெட்டியால் தாக்கி நபர் ஒருவர் கொ லை !

Back to top button