பிரதான செய்திகள்

யாழ்ப்பாண இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் ஹரிகரன் வெளியிட்ட பதிவு!

யாழ்ப்பாண இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் ஹரிகரன் வெளியிட்ட முகநூல் பதிவு!  யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ள ஹரிகரன் ஸ்டார் நைட் இசை நிகழ்ச்சியில் தென்னிந்தியா சினிமா பிரபலங்கள் பங்கேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நேற்றிரவு (09-02-2024) யாழ். முற்றவெளி அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாடகர் ஹரிகரன் தனது முகநூல் பதிவில்,

யாழ்ப்பாண இசை நிகழ்ச்சி

உங்கள் அதீத அன்பும் ஆதரவும் இசையின் ஒருங்கிணைக்கும் சக்தியை உண்மையிலேயே வெளிப்படுத்தியது. ஒன்றாக, நாங்கள் நல்லிணக்கத்தையும் இணைப்பையும் கொண்டாடினோம்.

இந்த நிகழ்வை ஒழுங்கமைப்பதில் அபார முயற்சி செய்த கலா மாஸ்டர் மற்றும் இந்திரகுமார் பத்மநாதன் அவர்களுக்கு சிறப்பு நன்றி. ஒவ்வொரு கணத்திற்கும் நன்றி என தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Back to top button